செராஸ் பொழுதுபோக்கு மையத்தை சேதப்படுத்திய கும்பலை தேடி வரும் போலீசார்

செராஸில் நேற்று மதியம் ஒரு பொழுதுபோக்கு மையத்தை, ஒரு கும்பல் சேதப்படுத்தியதாக நம்பப்படும் சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் ஒரு அறிக்கையில், சந்தேக நபர்கள் ஒரு லாரியில் அந்த மையத்தின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, பல பொருட்களை சேதப்படுத்தியதாகக் கூறினார்.

நாங்கள் தற்போது சந்தேக நபர்களைத் தேடி வருகிறோம் என்று கூறிய அவர், நேற்று இரவு இதுகுறித்து காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சொத்து சேதம் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பாக காவல்துறை இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here