திருவனந்தபுரம் , கேரள மாநிலம் திருச்சூர் அருகே முண்டத்திக்கோட்டில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடைபெற இருக்கும் திருச்சூர் பூரம் பண்டிகைக்கான தயாரிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், திருவாம்பாடி பிரிவின் மாதிரி பட்டாசு நிகழ்ச்சிக்காக அந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் ஏற்பட்ட இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஆலையின் உரிமையாளர் சதீஷும் தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளார்.









