அடுத்த ஆண்டு மலேசியாவிற்கு வருகை தருமாறு புடினுக்கு மன்னர் அழைப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த ஆண்டு மலேசியாவிற்கு வருகை தருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

புடினின் அழைப்பின் பேரில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள மாமன்னர், இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறிக்கும் வகையில் இன்று நடைபெற்ற ரஷ்யாவின் வெற்றி நாள் அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முதல் மலேசியத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.

மன்னருடனான சந்திப்பில் பேசிய புடின், ரஷ்யாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகள், வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் சிறப்பாக வளர்ந்து வருவதாகவும், வர்த்தகத்தில் ஏற்பட்ட சிறிய சரிவைச் சமாளிக்க இவை அனைத்தும் அவசியமானவை என்றும் கூறினார். இந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட மற்ற தலைவர்களில் பெலாரஸ், ​​உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் லாவோஸ் நாடுகளின் அதிபர்களும், ஸ்லோவாக்கியாவின் பிரதமரும் அடங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here