மோதியதால் ஏற்பட்ட உயிர் இழப்பு: தப்பி சென்ற லோரி ஓட்டுநரை தேடும் காவல்துறை

 ஶ்ரீ கெம்பாங்கனில் உள்ள ஜாலான் டேசா செர்டாங் சாலையில்,  கடந்த சனிக்கிழமை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற வாகன விபத்தில் 65 வயது முதியவர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, காவல்துறை லோரி ஓட்டுநரையும் சாட்சிகளையும் தேடி வருகிறது.

இரவு 9 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், வெள்ளை நிற  லோரி ஒன்றும், பாதிக்கப்பட்டவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்டிருந்ததாக காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரான் அப்துல் யூசோஃப் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், லோரி கவனக்குறைவாக ஒரு சந்திப்பில் திரும்பியதாகவும், எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் அதைத் தவிர்க்க முடியவில்லை என்றும் தெரியவந்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

அவ்வழியே சென்றவர்கள் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here