கோலாலம்பூர், டேசா பாண்டான் அருகே திங்கள்கிழமை காலை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஒரு கொடிய சாலை விபத்தைத் தொடர்ந்து, பிஎம்டபிள்யூ செடான் காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் தலைவர் சம்சுரி இஸா கூறுகையில், காலை சுமார் 8.30 மணியளவில், பாதிக்கப்பட்டவர் கம்போங் பாண்டான் சுற்று வட்டாரப் பாதையில் இருந்து டேசா பாண்டனை நோக்கி, ஜாலான் கம்போங் பாண்டான் சாலையின் இடது பாதையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.
ஒரு சந்திப்பிலிருந்து கார் சாலைக்குள் திரும்பியபோது, மோட்டார் சைக்கிள் அந்த வாகனத்தின் வலது பக்கத்தில் மோதியதாக அவர் கூறினார். 45 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார் என்று சம்சுரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார். 44 வயதான ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் அவர் போதைப்பொருள் அல்லது மதுபானம் அருந்திருக்கவில்ல என்பது உறுதியானது. அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தினாரா என்பது குறித்து இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.








