சபாவில் 2.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

சபாவின் குண்டாசாங் பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 2.9 ரிக்டர் அளவில் ஒரு பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வு காலை 10.36 மணிக்கு, ரானாவிலிருந்து சுமார் 15 கி.மீ வடமேற்கே, 10 கி.மீ ஆழத்தில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

சபாவின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம் என்றும், தங்கள் துறை நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் மெட்மலேசியா கூறியுள்ளது. இப்பகுதியில் ஏற்பட்ட கடைசி நிலநடுக்கம் ஏப்ரல் 21 அன்று, ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here