கோலாலம்பூர், கம்போங் பாண்டானில் மோதிவிட்டுத் தப்பிச் சென்ற 45 வயது நபர் இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காலை 7.26 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தின் டேஷ்கேம் காணொளிக் காட்சிகளை அதிகாரிகள் பெற்றுள்ளதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் தலைவர் ஸம்ஸூரி இஸா தெரிவித்தார். பெரோடுவா மைவி காரை ஓட்டி வந்த சந்தேக நபர், ஜாலான் வீராவதி 5 சாலையில் உள்ள ஒரு சந்திப்பிலிருந்து வெளியேறி, மிதிவண்டி ஓட்டுநர் மீது மோதியதாக நம்பப்படுகிறது. விபத்துக்குப் பிறகு ஓட்டுநர் வேகமாகத் தப்பிச் சென்றுள்ளார்.
“மனநல குறைபாடுள்ள ‘OKU’ அட்டை வைத்திருக்கும் சந்தேக நபர், தனது இளைய உடன்பிறப்பின் காரை ஓட்டி வந்துள்ளார்,” என்று சம்சுரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் காயங்களின் அளவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், விசாரணைக்கு உதவுவதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்வந்து புகார் அளிக்குமாறும் சம்சுரி கேட்டுக்கொண்டார். அலட்சியமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக இந்த வழக்கை காவல்துறை விசாரித்து வருவதாக அவர் கூறினார். டாஷ்கேம் வீடியோவின் உரிமையாளர் உட்பட சாட்சிகள், அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது வழக்கு விசாரணை அதிகாரியான ஹஸ்மானை 019-208 9005 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஸம்ஸூரி கேட்டுக்கொண்டார்.









