செடிலி கடல் மீன் வலையில் சிக்கிய மனித மண்டை ஓடு

ஜோகூர் பாரு,  கோத்தா திங்கி அருகே உள்ள செடிலி கடல் பகுதியில், உள்ளூர் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய, வயதான ஆடவரின் மண்டை ஓடு என நம்பப்படும் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கோத்தா திங்கி காவல் நிலையத் தலைவர் கண்காணிப்பாளர் யூசோஃப் ஓத்மான் கூறுகையில், அதிகாலை 3 மணியளவில் 44 வயது படகோட்டி ஒருவரால் இந்த மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டு, பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

மேலதிக பரிசோதனைக்காக, அந்த மண்டை ஓடு கோட்டா திங்கி மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். தடயவியல் மருத்துவ அதிகாரி நடத்திய பரிசோதனையில், இந்த மண்டை ஓடு 20 முதல் 30 வயதுக்குட்பட்ட வயது வந்த ஆணின் மண்டை ஓடு என நம்பப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த வழக்கு திடீர் மரண அறிக்கையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் அல்லது இவ்வழக்கு தொடர்பான தகவல்களைக் கொண்ட பொதுமக்கள், விசாரணைக்கு உதவுவதற்காக கோலா செடிலி காவல் நிலையத் தலைவர் எஸ்.எம். முகமது அய்சாத் அகமதுவை 018-246 4667 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here