ஜோகூர் பாரு: ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பாரிசான் நேஷனல் தனது ‘டேசிங்’ சின்னத்தைப் பயன்படுத்திப் போட்டியிடும் என்று அதன் பொதுச்செயலாளர் ஸம்ரி அப்துல் காதிர் நேற்று இரவு தெரிவித்தார். ஜோகூர் அம்னோ அலுவலகத்தில் நடைபெற்ற பாரிசான் நேஷனலின் ஆண்டுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஐந்து முக்கிய முடிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களே பாரிசான் நேஷனலின் முக்கியக் கவனமாக உள்ளது. வெற்றியை உறுதி செய்வதற்காகக் கட்சியின் அனைத்து அமைப்புகளும் முழுமையாகத் திரட்டப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். கூட்டாட்சி ஒற்றுமை அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாரிசான் கட்சி அதற்குத் தனது உறுதியான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று ஸம்ரி மீண்டும் வலியுறுத்தினார்.
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைப்பதற்கும், மக்களின் நலனுக்கான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும் கட்சியின் இந்த அர்ப்பணிப்பு இன்றியமையாதது என்று அவர் கூறினார்.





















