கோலாலம்பூர்: ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) மாலையில், கோலாலம்பூர்-கரக் (KLK) விரைவுச்சாலையின் 43வது கிலோமீட்டரில் நான்கு பேர் உயிரிழந்த கோர விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் லாரியின் ஓட்டுநர் மீது 15 போக்குவரத்து விதிமீறல் சம்மன்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
40 வயதான அந்த நபரிடமிருந்து நச்சுயியல் பகுப்பாய்விற்காக இரத்த மாதிரியும் எடுக்கப்பட்டதாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார். லோரி ஓட்டுநர் தற்போது தலை மற்றும் இடுப்பு காயங்களுக்கு மேலதிக சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
விசாரணையை நிறைவு செய்வதற்கும், சம்பவத்தின் ஒட்டுமொத்த காரணத்தைக் கண்டறிவதற்கும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய அந்த லோரி, சாலையின் இடதுபுறமாகக் கவிழ்ந்து, இடது வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு காரின் மீது மோதியது.









