கோலாலம்பூர்:
இன்று காலை 9 மணி நிலவரப்படி, ஜோகூரில் உள்ள இரண்டு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன.
சுற்றுச்சூழல் துறையின் காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையதளத்தின்படி, பத்து பஹாட்டில் காற்று மாசுக்குறியீடு 155 ஆகவும், லார்கினில் 122 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், நாட்டிலுள்ள 48 பகுதிகள் 51-100 அளவீடுகளுடன் மிதமான API ஐ பதிவு செய்துள்ளன, மற்ற 18 பகுதிகள் 50 க்கும் குறைவான API அளவீடுகளை பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.