மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு

சென்னை, மக்கள் தொகை சுய கணெக்கெடுப்பு முறையில் முதல்-அமைச்சர் விஜய், தனது விபரங்களை பதிவு செய்துள்ளார். அத்துடன், தமிழக மக்கள் அனைவரும் சுய கணக்கெடுப்பு முறையில் தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;

எல்லா திட்டங்களுக்குமான அடிப்படை

”அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்! நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.

இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்! உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here