இந்தியா – அமெரிக்கா கடற்படை கூட்டுப்பயிற்சி கொச்சியில் நிறைவு …

கொச்சி, இந்தியா – அமெரிக்கா கடற்படையினர் இணைந்து நடத்திய 8-வது வெடிபொருள் அகற்றுதல் பயிற்சி கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

சிறந்த நடைமுறைகள்

இப்பயிற்சியின் போது இருநாட்டு கடற்படை குழுக்களும் தொழில் ரீதியிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். மேலும், தங்களின் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொண்டதோடு, பல்வேறு செயல் விளக்கங்களையும் செய்து காண்பித்தனர்.

வெடிபொருள் அகற்றும் நடவடிக்கைகளின் பல்வேறு முக்கிய அம்சங்களை இப்பயிற்சி வழங்கியது.

பாதுகாப்பு நடைமுறை

நவீன வெடிபொருட்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல். கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுதல். ஆபத்தான கண்ணிவெடிகளை செயலிழக்க செய்தல். நீருக்கடியில் ஆளில்லா அதிநவீன அமைப்புகளைப் பயன்படுத்துதல்.

மீட்பு நடவடிக்கைகள்

கடலில் மூழ்கிய கப்பல்களை கண்டறிந்து மீட்பது, அதற்கான சிறப்பு உபகரணங்களை கையாளுவது மற்றும் ஊர்ந்து செல்லும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சவாலான பயிற்சிகளும் இதில் மேற்கொள்ளப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here