2 நாட்கள் பயணமாக இந்தியா சென்ற இலங்கை அதிபருக்கு அமோக வரவேற்பு

கடந்த காலங்களில் இலங்கையின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு செல்லும்போதெல்லாம், தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் வெளிவரும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான பல அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடுவர்.

ஆனால் இன்று இந்தியாவுக்கு சென்றுள்ள புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்கவிற்கு, எல்லா தரப்பினர்களிடமிருந்தும் அமோகமான வவேற்பு கிடைத்துள்ளது. ராஜ மரியாதையுடன் அவரை இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் வரவேற்றனர்.

சீன, அமெரிக்க தலையீடுகள் அதிகம் நிறைந்துள்ள இலங்கையின் கடந்தகால அரசியளுக்கு மத்தியில், அனுர குமாரவின் முதல் பயணமாக இந்தியாவை தெரிவு செய்வதில், நிச்சயம் சிறந்த ஒரு நோக்கம் இருக்கும் என இலங்கையர்கள் கருதுகிறார்கள். முக்கியமாக இலங்கைத் தமிழர்கள், இந்திய இலங்கை உறவை எப்போதும் தாய் -சேய் உறவாகவே நினைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here