மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 860 கிலோ காய்கறிகளை சிங்கப்பூர் பறிமுதல் செய்தது

சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA), நேற்று துவாஸ் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 860 கிலோ புதிய காய்கறிகளைக் கைப்பற்றியது. சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) மற்றும் SFA ஆகியவை சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு நேரடி விநியோகத்திற்காக விளைபொருட்களை கொண்டு செல்லும் டெலிவரி லோரிகளில் கூட்டு நடவடிக்கை எடுத்ததாகக் கூறின.

ஒரு லோரி மூலம் கொண்டு செல்லப்பட்ட ஒரு சரக்கில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிந்த ICA அதிகாரிகள், அதை SFA-க்கு அனுப்பினர். அந்த லோரியில் ஐந்து இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட சோய் சம், ரோமைன் லெட்யூஸ் மற்றும் புதினா இலைகள் போன்ற அறிவிக்கப்படாத மற்றும் குறைவாக அறிவிக்கப்பட்ட காய்கறிகள் இருப்பதைக் கண்டறிந்தனர். உரிமம் பெற்ற இறக்குமதியாளர்களால் மட்டுமே உணவை இறக்குமதி செய்ய முடியும். மேலும் ஒவ்வொரு சரக்கும் அறிவிக்கப்பட்டு செல்லுபடியாகும் இறக்குமதி அனுமதியுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் தெரியாத மூலங்களிலிருந்து பெறப்பட்ட உணவுப் பொருட்கள் உணவுப் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். சிங்கப்பூருக்குள் புதிய பழங்கள் அல்லது காய்கறிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு S$10,000 (RM32,760) வரை அபராதம் மற்றும்/அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here