மாணவியை பாலியல் துன்புறுத்திய நான்கு மாணவர்கள் பள்ளியிலிருந்து நிரந்தர நீக்கம்

KUALA TERENGGANU, 11 Ogos -- Ketua Pengarah Pendidikan Malaysia, Dr Mohd Azam Ahmad pada sidang media pada Majlis Apresiasi Guru MADANI Terengganu 2025 di sebuah hotel, hari ini.Majlis disempurnakan oleh Menteri Pendidikan Fadhlina Sidek.-- fotoBERNAMA (2025) HAK CIPTA TERPELIHARA

ஷா ஆலம்:

மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா பகுதியில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில், மூன்றாம் படிவ மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நான்கு ஐந்தாம் படிவ மாணவர்கள் நிரந்தரமாகப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கை, பள்ளியின் ஒழுங்குமுறை மற்றும் நெறி ஆணையத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக, மலேசிய கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஆசாம் அகமட் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“பள்ளி நிர்வாகம் மற்றும் நெறிக் குழு மேற்கொண்ட விரிவான விசாரணையின் பின், சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களையும் நிரந்தரமாக நீக்க முடிவு செய்யப்பட்டது,”
என அவர் கூறினார்.

இந்த மாணவர்கள் 2024ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வை பள்ளியில் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள், ஆனால் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்யும் சிறப்பு மையத்தில் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்படும்.

அத்துடன், தேர்வு மாவட்டக் கல்வி அலுவலகம் (PPD) மற்றும் மாநிலக் கல்வித் துறை (JPN) ஆகியவற்றின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும் என்றும், மாணவர்களின் அடையாளம் இரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் விளக்கினார். அனைத்து தேர்வுகளும் மலேசிய தேர்வு வாரியம் (LPM) விதிமுறைகளின்படி நடத்தப்படும்.

மீண்டும் கல்வியைத் தொடர விரும்பினால், இந்த மாணவர்கள் மற்ற கல்வி நிறுவனங்களில் சேர விண்ணப்பிக்கலாம், ஆனால் அவர்கள் முன்பு படித்த அதே பள்ளியில் மீண்டும் சேர்க்க அனுமதி வழங்கப்படமாட்டாது.

“எஸ்.பி.எம். தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டது என்பது அவர்கள் குற்றமற்றவர்கள் என்று பொருளல்ல. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை, எந்த நபரும் குற்றவாளி என கருதப்பட மாட்டார். இது கல்வி மற்றும் சட்டம் இடையே சமநிலையை நிலைநிறுத்தும் முக்கியக் கோட்பாடாகும்,”என்று டாக்டர் ஆசாம் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here