சுங்கை கிளாங்கில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன ஆடவரை தேடும் நடவடிக்கை தொடர்கிறது

பின்டாசான் சலோமா அருகே உள்ள சுங்கை கிளாங்கில் நீர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் காணாமல் போனதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின்படி, குழாய் மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டிருந்த அந்த நபர் மாலை சுமார் 5.30 மணியளவில் தனது வாகனத்தை ஒரு பாலத்தின் கீழ் நகர்த்த விரும்பினார்.

பாலத்தின் கீழ் மொத்தம் 13 பேர் இருந்தனர். அவர்கள் நீர் எழுச்சி அவர்களின் இடத்தை அடைந்தபோது தப்பிக்க முடியவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட 13 பேரில் 12 பேரை மீனவர்கள், குழாய் மேம்படுத்தும் தொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டனர் என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இதற்கிடையில், காணாமல் போன நபரைத் தேடும் பணி இரவு 11 மணிக்கு நிறுத்தப்பட்டு நாளை காலை 9.30 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சசாலி ஆடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. காவல்துறை, தீயணைப்பு வீரர்கள்  ஏஜென்சி பணியாளர்களைக் கொண்ட குழு, நாளை மீண்டும் தேடுதலைத் தொடங்கும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here