PN தலைவர் பதவியில் இருந்து முஹிடினின் ராஜினாமா “யாரும் எதிர்பாராத ஒரு மாஸ்டர் பிளான்”: ரெட்சுவான்

பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவர் பதவியில் இருந்து முஹிடின் யாசின் ராஜினாமா செய்தது “யாரும் எதிர்பார்த்திராத ஒரு மாஸ்டர் பிளான்” என்று பெர்சத்து நிறுவன உறுப்பினர் ரெட்சுவான் யூசோஃப் கருத்துரைத்தார்.  இது கூட்டாளிகள் மற்றும் விமர்சகர்கள் இருவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய “கணக்கிடப்பட்ட நடவடிக்கை” என்று பாராட்டினார்.

பெர்லிஸில் சமீபத்திய அரசியல் கொந்தளிப்பால் முன்னாள் பிரதமரின் முடிவு தூண்டப்பட்டது என்ற கூற்றுகளை ரெட்சுவான் நிராகரித்தார். அதற்கு பதிலாக முகைதீன் நீண்ட காலமாக “பரந்த திட்டத்தின்” படி செயல்பட்டு வருவதாக வலியுறுத்தினார்.

பெர்க்காத்தான் தலைவர் பதவியில் இருந்து விலகுவதன் மூலம், முஹிடின் பெர்லிஸ் நெருக்கடி ஒரு தேசியப் பிரச்சினையாக மாறுவதைத் தடுத்தார். அதே நேரத்தில், பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து அவரைப் பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கும் ‘கலகக்காரர்களின்’ முயற்சிகளை அவர் முறியடித்துள்ளார். இதையெல்லாம் அவர் ஒரு பேனாவால் செய்தார்,” என்று முன்னாள் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரும் சிறப்புப் பணிகள் அமைச்சருமான அவர் எஃப்எம்டியிடம் கூறினார்.

முஹிடினின் ராஜினாமா, பெரிக்காத்தான் மக்களின் ஆதரவில் அதன் தாக்கத்தை கவனமாகப் புரிந்து கொள்ளாமல் செய்யப்பட்ட ஒரு சூதாட்டம் என்று கட்சியின் தகவல் மற்றும் இளைஞர் தலைவர்கள் உட்பட பாஸ்-இல் உள்ள சில தரப்பினரின் குற்றச்சாட்டுகளையும் ரெட்சுவான் நிராகரித்தார். மாறாக, இந்த ராஜினாமா, பெர்சத்துவை வலுப்படுத்துவதற்கு முஹிடின் தனது ஆற்றலைச் செலுத்த அனுமதித்துள்ளது என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here