
ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகம், பட்ஜெட் கேள்விகளுக்கான பிரத்தியேக ஆலோசனைக் குழுவுக்கு இந்திய வேட்பாளர் விதிஷா மைத்ரா அதிக வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார்.
இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பினர்கள் இணைந்து ஆலோசனைக் குழுவுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தகுதி, அனுபவம் ஆகியவைகளின் அடிப்படையாக வைத்து இந்த குழுவின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விதிஷா மைத்ராவுக்கு 126 வாக்குகள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிய- பசிபிக் நாடுகள் சார்பில் இரு நபர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் விதிஷா மைத்ரா அதிக வாக்குகளை பெற்று இருக்கின்றார்.
3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் அவர் நீடிப்பார். வருகின்ற 2021 ஆம் வருடம் ஜனவரி 1 ஆம் தேதி அவர் பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஐ.நாவில் உறுப்பினராக இருக்கும் நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதை இந்த நிகழ்வு காட்டுவதாக ஐ.நாவுக்கான இந்திய நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.