பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு நகல் எடுக்கும் இயந்திரம் டத்தோ வேலு வழங்கினார்

நாட்டில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பொது இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து பல்வேறு உதவிகளை – ஙே்வைகளை வழங்கி வருகின்றனர்.  அந்த வகையில் நீலாய் வட்டாரத்தில் அமைந்துள்ள பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு ம.இ.கா. நெகிரி மாநிலத் தொடர்புக்குழுத் தலைவரும் தெலுக்கெமாங் தொகுதித் தலைவருமான டத்தோ எம்.வேலு, வேலுமயில், சிவா, ரமேஷ், ரகு, அச்சு ஆகியோர் முயற்சியில்  தமிழ்ப்பள்ளிக்கு நகல் எடுக்கும் இயந்திரத்தை வழங்கினர்.

கடந்த வாரம் பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு வருகை புரிந்த டத்தோ வேலு தலைமையில் அவரின் நண்பர்கள் இணைந்து நகல் எடுக்கும் இயந்திரத்தை வழங்கியதோடு மேலும் உதவிகள் செய்வதற்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம். அவர்கள் ஆளும் கட்சிக்காரர்கள்,  எதிர்க்கட்சிக்காரர்கள் என்ற பேதமில்லை.  தமிழ்ப்பள்ளிகள் என்று வரும்போது அங்கு அரசியல் பார்க்காமல் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று டத்தோ வேலு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here