ஷா ஆலம்
செத்தியா ஆலமில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும்போது, மாட்சிமை தங்கிய பேரரசர் விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அந்த நிகழ்ச்சியை பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி பதிவு செய்து ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் யுஎஸ்ஜே முச்சந்தியில் நடந்த விபத்தைக் கண்ணுற்ற பேரரசர், காரில் இருந்து இறங்கி மாது ஒருவருக்கு ஆறுதல் கூறினார்.
அந்தப் பெண்ணின் கார் வழுக்கிச் சென்று வலது புறத்தில் குடை சாய்ந்திருந்தது. அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல தமது மெய்க்காப்பாளர் களுக்குப் பணித்தார்.
ஜுன் மாதம் சுல்தான் அப்துல்லா, புத்ரா ஜெயாவுக்குச் சென்றபோது, விபத்தில் சிக்கியோருக்கு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.