ஸ்ரீஹரிகோட்டா – இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் சந்திரயான்-2 வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவின் தென்பகுதியில் லேண்டர் கருவி மெதுவாக நள்ளிரவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நாளை அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வை தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. திட்டம் வெற்றி பெற்றால் அமேரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து நிலவில் விண்கலத்தை இறக்கிய 4வது நாடாக இந்தியா திகழும்.