கோலாலம்பூர், மார்ச் 11-
தனது பணியாளர் ஒருவர் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கோலாலம்பூர் ராஜா லாவுட் சாலையில் உள்ள இபிஎப் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சுகாதார பாதுகாப்பு பணிகளுக்காக இந்த அலுவலகம் எதிர்வரும் 16ஆம் தேதி வரையில் மூடப்பபடுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி மார்ச் 13-ஆம் தேதி வரையில் தலைமையகத்தில் சுகாதார அடிப்படையிலான துப்புரவுப் பணிகளும் தடுப்பு மருந்து தெளித்தல் போன்ற பணிகளும் நடைபெறும்.
மார்ச் 16-ஆம் தேதி வழக்கம்போல அலுவலகம் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என இபிஎப் அறிவித்துள்ளது.