இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி சிந்து தோல்வி… ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறி…!

பி.வி சிந்து தோல்வி... ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறி...!

இந்திய வீராங்கனை பி.வி சிந்து இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் தோல்வியடைந்தார்.ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. அந்த போட்டியில் பி.வி சிந்து, ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய பி.வி சிந்து 21-12 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

ஆனால், அடுத்த இரு செட்களில் நவோமி ஒசாகா அதிரடியாக விளையாடி 21-15, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வி அடைந்தார்.
இந்த தோல்வியின் மூலம் அவரது ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here