முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் 50 வயது நிரம்பிய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக யூகிக்கப்படும் செய்தியைத் தொடர்ந்து அப்பெண் மறுத்து போலீஸ் புகார் செய்திருக்கிறார்.
நஜிப் இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக அப்பெண்ணின் படம் வைரலானதைத் தொடர்ந்து இதை மறுத்து அப்பெண் புகார் செய்திருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து பேஸ்புக் பயநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரை வலியுறுத்திய நூர்ஹைசா என்ற அப்பெண் பாதுகாப்புக்காக புகார் செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.