அமைச்சரவை குறித்த விமர்சனங்களை நிறுத்துக

அமைச்சரவை குறித்த விமர்சனங்களை நிறுத்துக

ஜொகூர், மார்ச் 15-
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் தலைமையிலான அமைச்சரவை குறித்த விமர்சனங்களை நிறுத்திக்கொள்ளுமாறு பிரிபூமி பெர்ங்த்து கத்சியின் ஜொகூர் மாநிலச் செயலாளர் முகமட் சாலிஹான் பத்ரி கேட்டுக்கொண்டார்.

எந்த கட்சிக்கு இந்த அறிவுரை என்று அவர் குறிப்பிடவில்லை. ஆனாலும், அனைத்துக்கட்சிக்கும் பொதுவான அறிக்கையாகவே அவர் குறிப்பிட்டிருப்பதாகக் கருத்துரைக்கப்படுகிறது.

வீணான விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டு புதிய அரசாங்கத்தையும் நாட்டை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்துமாறும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

நாட்டின் கடினமான நேரத்தில் வெறும் விமர்சனங்களால் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம் என்ற அவர், துணை அமைச்சர்களை நியமிக்க அவசரம் காட்டுவதில் அர்த்தமில்லை என்றும் கூறினார்.

புதிய அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுப்பதற்குப் பதிலாக ஆதரவை வழங்கவேண்டும். அதேவேளை மக்கள் வெறுப்படைந்துவிடவும் கூடாது.

அம்னோவின் அதிருப்தியைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு கருத்துரைத்துரைத்திருப்பதாக அரசியல் வட்டாரம் கூறுகிறது.

நாடு முதிர்ச்சியான அரசியலைக் காட்டவேண்டும். அதுதான் தேவை. ஆரோக்கியமற்ற விமர்சனங்கள் அல்ல என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here