சரவாக்கிலிருந்து திரும்பிய கிளந்தான் முப்திக்குத் தொற்று அறிகுறி

முப்திக்குத் தொற்று அறிகுறி

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 20-

சரவாக்கிலிருந்து திரும்பிய முப்தி ஒருவருக்கு கொரோனா 19 தொற்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கிளந்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருப்பதாகச் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.

சரவாக் மாநிலத்திலிருந்து திரும்பிய பின் மூட்டுவலிக்காக மருத்துவ சிகிச்சை பெற்று மருத்துவ விடுப்பில் இருந்தார் .

தொடர்ந்து அவருக்குக் காய்ச்சல் இருந்தது. அவர் மீண்டும் மருத்துவ சிகிச்சைக்காக ராஜா பெரம்புவன் ஜைனாப் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்பொதைய நிலவரப்படி அவருக்கு கொரோனா 19 தொற்று இருப்பதை அவரின் குடும்ப உறுப்பினர் கூறினார்.

முப்தியுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனைக்கு உடபடுத்தும்படி கூறப்பட்டதையும் முப்தியின் உறவினர் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here