பாரிஸ் –
உலக அளவில் கொரோனா பலி 16 ஆயிரத்தைக் கடந்தது. இதில் அதிகபட்சமாக இத்தாலியில் மட்டுமே 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மொத்த எண்ணிக்கையில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 1,634 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14,687ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
உலகம் முழுவதும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து வருகிறது.
தற்போது இத்தாலியில் கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் சீனாவைவிட இத்தாலியில் பலி எண்ணிக்கை கூடி விட்டது.
மேலும் புதிதாக 5 ஆயிரத்து 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 138ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தேசிய சுகாதார கவுன்சில் தலைவர் பராங்கோ லோகடெல் கூறும்போது, கடந்த 15ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட முதல் விளைவுகளை பார்க்க எதிர்நோக்கி உள்ளோம். இந்த சுழ்நிலையில் வரும் வாரங்கள் மிக முக்கியமானதாகும். இறுதியாக வைரசின் அறிகுறிகள் தலைகீழாக மாறும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
இதனிடையே உலகம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 553 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.