சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-
இந்த வீடியோ கொரோனா வைரசைப் பற்றியதுதான். அவர்களுடைய உடல் நலம், குடும்பத்தை பற்றியெல்லாம் யோசிக்காமல் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சல்யூட்.
நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள். அவசரத் தேவை என்றால் மட்டும் வெளியே வாருங்கள்.
இன்னும் கொரோனாவின் தீவிரம் தெரியாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு 10 அல்லது 20 பேருக்காவது இந்த வீடியோ போய் சேர வேண்டும்” என்று பேசியுள்ளார்.