சென்னை –
ஊரடங்கு விதிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் கெடுபிடி அதிகரித்துள்ளது. ஊரடங்கை மீறுவோரை போலீசார் லத்தியால் சுளீர், சுளீர் என அடிக்கின்றனர்.
சாமானியர்கள் மீதும் பொதுச்சேவை செய்வோர் மீதும் பத்திரிகை விநியோகிப்போர் மீதும் இந்தக் கெடுபிடி தொடர்கிறது.
ஊரடங்கு விதிக்கப்பட்டதால் மாவட்டங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. போலீஸ் சோதனையில் நிற்காமல் சென்றவர்களை போலீசார் லத்தியால் அடித்தனர். வாகனமோட்டிகளை விரட்டி விரட்டி அடித்தனர்.
ஊரடங்கின்போது வாகனங்களில் செல்வோரைத் தாக்கக்கூடாது என போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டது.