ஷா ஆலம், ஏப்.3-
ஷா ஆலம் வட்டாரத்தில் கொரோனாவின் தாக்கம் கடுமையாகி வருகிறது.
செக்ஷன் 7 நீலாம்சாரி அடுக்குமாடி குடியிருப்பில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புளோக் 54இல் ஒருவரும் புளோக் 56இல் ஒருவரும் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
புளோக் 55இல் உள்ள சமய வழிபாட்டுத் தலத்திற்கு இவர்கள் அடிக்கடி வழிபாடு நடத்த வந்தது தெரிய வந்துள்ளது.
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அருகில் உள்ள ஐசிட்டி சுற்றுலாத் தளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அதிகமான இந்தியர்கள் வசிக்கும் நீலாம்சாரி அடுக்குமாடி முழுவதும் மக்கள், மஞ்சள் தெளித்து வேப்பிலை கட்டத் தொடங்கியுள்ளனர்.