கோலாலம்பூர், ஏப்12-
ஒரு சில துறைகளுக்கு கட்டுப்பாட்டுத் தளர்வு விதித்திருப்பது அவசியமற்ற ஒன்று எனவும் அரசாங்கம் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் நோர்ஹிஷாம் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவின் தாக்கம் இன்னமும் நீடித்து வருகிறது.
கொரோனா கட்டுப்படுத்தப்படாத சூழலில் ஒரு சில தனியார் துறைகள் இயங்கலாம் என பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அறிவித்துள்ளார்.
சிகை அலங்காரத் துறையும் அதில் அடங்குகிறது. தற்போதைய நெருக்கடியான சூழலில் சிகை அலங்காரத் துறை செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக சுகாதார அமைச்சு கருதவில்லை என நோர்ஹிஷாம் கருத்துரைத்துள்ளார்.







