மலாக்கா, ஏப்.12-
மலாக்கா மாநிலத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த 7 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பொறியியலாளர் ஒருவர் தனது வீட்டைப் புதுப்பிக்க முயன்று வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது இக்குண்டுகள் தரையில் புதைந்திருக்க கண்டுபிடிக்கப்பட்டன.
சம்பவ இடமான சுங்கை ஊடாங்கில் உள்ள ஜாலான் சோலோக் டோகோலுக்கு விரைந்தனர்.
7 குண்டுகளும் செயலிழக்கச் செய்யப்பட்டதாக மலாக்கா தெங்கா காவல் துறைத் தலைவர் ஏ.சி அப்சானிசார் அமாட் உறுதிப்படுத்தினார்.