புத்ராஜெயா:
இந்த மாதம் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று சூசகமாக தெரிவித்தார்.
இன்று சூராவ் புத்ரா அல்-அமீனில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்த பிறகு, அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கேட்டபோது “2024 ஆம் ஆண்டுக்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ நீங்கள் எப்போது நடைபெறலாம் என நினைக்கிறீர்கள் என கேட்டார்?”
“2024க்கு முன்” என்று அங்கிருந்த சிறுவன் சொன்னபோது, அன்வர் சிரித்துக்கொண்டே “ 2024க்கு முன்பே என்று அவர் சொன்னார். அதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.