ஜெனிவா –
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 19 லட்சத்து 17 ஆயிரத்து 699 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 13 லட்சத்து 56 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 51 ஆயிரத்து 720 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் இதுவரை 4 லட்சத்து 42 ஆயிரத்து 323 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 113 பேர் உயிரிழந்துள்ளனர்.