மலாக்கா,ஏப்.18-
மலாக்கா மாநிலத்தில் 3,224 பேர் மீது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ரஹ்மாட் மரிமான் தெரிவித்தார்.அவர்களுள் 148 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2,789 பேர் தொற்று இல்லை என வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர்.288 பேர் மீதான சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
ஜாசின் வட்டாரத்தில் 37 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அலோர் காஜாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.