கங்கார், ஏப்.22-
கோலா பெர்லிஸில் திங்கள்கிழமை (ஏப்ரல் 20) மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு
ஆணையில் (எம்.சி.ஓ) சாலைத் தடையை நிர்வகிக்கும் ஓர் அதிகாரியை வார்த்தைளால் சபித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காலை 11.45 மணியளவில் சம்பவத்தின்போது கங்கார் போலீஸ் சுப்ரிண்டெண்டன்ட் வாரி கிவ் கூறுகையில், சுயதொழில் புரியும் 35 வயதான அந்த நபர், கிளந்தான் மாநில பேச்சுவழக்கில் அந்த அதிகாரியை நோக்கி மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்திருக்கிறார்.
போலீசார் அவரது அடையாள அட்டையைக் கேட்டபோது, அதற்குப் பதிலாக அந்த நபர் அருகில் இருந்த அதிகாரியை நோக்கி மோசமாகக் குரல் கொடுத்தார்.
சாலைத்தடுப்பில் கடமையில் இருக்கும் அதிகாரியின் கேள்விக்கு பொறுப்பான வார்த்தைகளால் பதில் சொல்லவேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது.
தவறான வார்த்தைகளை உபயோகித்த காராணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.