பாலிங்:
செக்கோலா கெபாங்சான் (எஸ்கே) பூலாய்க்கு முன்னால், விறகு சேகரித்துக் கொண்டிருந்த மூதாட்டியின் மீது மரம் ஒன்று திடீரென விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் 3.49 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே அந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மரம் விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ரஃபியா ஜகாரியா (84) என்பவரை மீட்டதாகவும், ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பாலிங் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தலைவர், முகமட் ஜமில் மாட் டாட் தெரிவித்தார்.