கோலாலம்பூர், ஏப்.23-
மலேசியாவில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக சுகாதார இலாகா அறிவித்துள்ளது.மலேசியாவின் ஆரஞ்சு மண்டலங்கள் மஞ்சள் மண்டலங்களாக மாற்றப்பட்டுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோம்பாக், செராஸ், டுங்குன், மூவார், புத்ரா ஜெயா ஆகிய மண்டலங்கள் மஞ்சள் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
லெம்பா பந்தாய், கிள்ளான், பெட்டாலிங், உலு லங்காட், கெப்போங், தித்திவங்சா ஆகியவை தொடர்ந்து சிவப்பு மண்டலங்களாக நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.