ஷா ஆலம், ஏப்.24-
கடுமையான புயல் காற்று காரணமாக ஷா ஆலம் வட்டாரத்தில் மரங்கள் பெயர்ந்து விழுந்தன.நேற்று இரவு பெய்த கடுமையான மழையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
91 மரங்கள் பலத்த காற்று காரணமாக பெயர்ந்து விழுந்தன. ஷா ஆலம் நகராண்மைக் கழகத்தின் பேரிடர் மீட்பு அமலாக்கப் பணியாளர்கள் இரவு முழுவதும் பணியாற்றி, மரங்களை அப்புறப்படுத்தினர்.