புதுடில்லி, ஏப்.24-
பூண்டுகளைக் கொண்டு கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
கொரோனா தாக்கத்தை பூண்டு குறைத்து விடும் ஆற்றல் இருப்பதாக இந்திய மருந்தியல் ஆய்வியல் துறை கண்டறிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அரசு அங்கீகாரத்துடன் பூண்டு மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் இந்திய மருந்தியல் ஆய்வுத்துறை ஈடுபட்டு வருகிறது.
கொரோனாவை தணிக்க பூண்டு உதவாது என உலக சுகாதார நிறுவனம் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில் இம்முயற்சியின் மீது முழு நம்பிக்கை வைத்து செயல்படுவதாக ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.