கப்பளா பாத்தாஸ் (பெர்னாமா): சனிக்கிழமை (ஏப்ரல் 25) பினாங்கு கம்போங் 20 என்ற இடத்தில் ஒரு விவசாயி தனது சொந்த டிராக்டர் மோதியதில் கொல்லப்பட்டார்.
21 வயதான முஹம்மது இசாத் அஸ்னானின் சடலம் அவரது நண்பரால் சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் நெய் வயலில் கண்டெடுக்கப்பட்டதாக வடக்கு செபெராங்பிறை மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி நூர்செய்னி மொஹமட் நூர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் இயந்திரத்திலிருந்து விழுந்து டயருக்கு அடியில் சிக்கியிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவரின் உடலை எடுக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடினர் என்றார்
சம்பவ இடத்திலுள்ள ஒரு மருத்துவ குழு அவரின் மரணத்தை உறுதிசெய்தது. அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கப்பளா பத்தாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. – பெர்னாமா