ஈப்போ: நடமாட்டு கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) மீறியதாக துணை சுகாதார அமைச்சர் டத்துக் டாக்டர் நூர் அஸ்மி கசாலி மற்றும் மாநில நிர்வாக கவுன்சிலர் (எக்ஸோ) ரஸ்மான் ஜகாரியா மீது நாளை குற்றம் சாட்டப்படும்.
இருவர் மீதும் காலை 9 மணிக்கு ஜெரிக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.பேராக் காவல்துறைத் தலைவர் டத்துக் ரசருதீன் ஹுசைனை தொடர்பு கொண்டபோது, இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
நாளை காலை ஜெரிக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குச் செல்வார்”
குனுங் செமங்கோல் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் டாக்டர் நூர் ஆஸ்மி ஆகியோர் தஹ்ஃபிஸ் மையத்தில் மாணவர்கள் உட்பட சுமார் 30 பேருடன் உணவு உண்ணும் வைரலாகியது.
முதன்முதலில் நூர் ஆஸ்மியின் பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், எம்.சி.ஓவை மீறியதா என்று பலர் கேள்வி எழுப்பத் தொடங்கிய பின்னர் பின்னர் நீக்கப்பட்டன.
இந்த நிகழ்வின் போது அவர்களுக்கு “கம்போபங்” உணவுகள் வழங்கப்பட்டதாக ரஸ்மான் தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.20 முதல் 30 பேர் வரை தரையில் உட்கார்ந்திருப்பதாக புகைப்படங்கள் காட்டின.