மக்கள் நடமாட்ட கூடல் இடிவெளி கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) மீறியதற்காக இங்குள்ள ஜலான் மெங்குவாங்கில் உள்ள முடிதிருத்தும் கடையில் முடிதிருத்தும் உள்பட 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
வடசெபெராங் பிறை மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி இதனைக் கூறினார். வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டுவதற்காக ஒரு முடிதிருத்தும் கடை ரகசியமாக திறக்கப்பட்டிருப்பதாகப் போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது.
பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த சோதனையின் போது, கடையில் முடிதிருத்துவதற்காக காத்திருந்த 13 ஆண்களும் மற்றும் 12 ஆண்கள் முடி வெட்டிக்வதற்காக கடைக்கு வந்ததாக ஒப்புக்கொண்டனர்.
20 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் அனைவரும் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி நட்டத்தை மீறியதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தொற்று நோய்களைத் தடுப்பது ,கட்டுப்படுத்துவது ,பாதிக்கப்பட்ட உள்ளூர் பகுதிகளுக்குள் நடவடிக்கைகள், விதிமுறைகள் 2020 தொடர்பான தண்டனைச் சட்டம், ஒழுங்குமுறை 11 (1) இன் பிரிவு 269 ன் கீழ் இவ்வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.