வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சோதனைக்கு உட்படவேண்டும்

பெட்டாலிங் ஜெயா:
வெளிநாட்டு தொழிலாளர்கள் கோவிட் -19 தொற்று சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது இது முதலாளிகளே செய்ய வேண்டியிருக்கும் என்று டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகிறார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் கோவிட் -19 தொற்று வழக்குகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

Pekerja Asing Di Malaysia: 5 Fakta Penting Yang Anda Perlu Tahuவெளிநாட்டு தொழிலாளர்கள் அடங்கிய பெரும்பான்மையினர் தொற்றுடையவர்களாக இருக்கின்றனர். அதனால், இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சரரான அவர் தெரிவித்தார்.

அவர்கள் பரிசோதனை செய்யப்பட வேண்டும். சோதனைகளின் செலவை முதலாளிகளே ஏற்க வேண்டும். கோலாலம்பூர், சிலாங்கூரில் இச்சோதனை தொடங்கப்படும் என்று தனது தினசரி சந்திப்பில் இஸ்மாயில் கூறினார்.

அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் இந்த சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். கோவிட் -19 தொற்று கண்டறியப்பட்ட எந்த வளாகமும் உடனடியாக மூடப்படும் என்று அவர் கூறினார்.

சனிக்கிழமை (மே 2), கோலாலம்பூரில் உள்ள ஜாலான் ஆம்பாங்கில் ஒரு கட்டுமான இடத்தில் 27 புதிய கோவிட் -19 தொற்று வழக்குகள் கண்டறியப்பட்டன. அந்த கட்டுமான இடம் இப்போது மூடப்பட்டுள்ளது. மலேசியா தொடர்ந்து இரண்டு நாட்களில் மூன்று இலக்கங்களில் புதிய கோவிட் -19 தொற்று வழக்குகளைப் பதிவாகியிருக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை, 122 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டன, இது 6,298 ஆக இருந்தது. புதிய 122 வழக்குகளில் 70 உள்ளூர் பரிமாற்றங்களாகும், 52 தொற்றுகள் இறக்குமதி செய்யப்பட்டவை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here