கோலாலம்பூர்: திங்கள்கிழமை (மே 11) அதிகாலை செலாயாங்கில் உள்ள மொத்த விற்பனை சந்தையில் குடிநுழைவுத்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காலை 10.30 மணியளவில், பல லோரிகள் இப்பகுதியை விட்டு வெளியேறுவதைக் காண முடிந்தது, தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இடமாக இப்பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. காலை 6 மணியளவில் இந்த சோதனை தொடங்கியதாக நம்பப்படுகிறது.
ஊரடங்கு அம்பலில் இருப்பதால் ஊடகவிலாயாளர்கள் அப்பகுதிக்கு அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், குறைந்தது மூன்று லோரிகள் காலை 10.30 மணியளவில் போலீஸ் பாதுகாப்போடு அவ்விடத்தை விட்டு சென்றது.