தாமான் தித்திவங்சா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக தலைநகரில் அமைந்துள்ள தாமான் தித்திவங்சா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

ஓய்வெடுக்க உகுந்த இடமான அங்கு மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் நோய் தொற்று ஏற்படும் சாத்தியம் இருப்பதால் அந்த தாமான் மூடப்படுகின்றது என்று டிபிகேஎல் அதன் முகநூல் வாயிலாக தெரிவித்துள்ளது.

அந்த தாமான் வெளிப்பகுதியில் ஜோக்கிங் ஓடுபவர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here