குனோங் செமாங்குல் நெடுஞ்சாலை ஓய்விடத்தில் நின்று கொண்டிருந்த ஆடவர் ஒருவரை சோதனை செய்தபோது அவரிடமிருந்து 11,500 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார் விசாரித்தபோது அந்த ஆடவர் தன்னிடமிருந்த பிளாஸ்டிக் பையைத் தூக்கி வீச முற்பட்டுள்ளார். அந்தப் பையில் போதைப்பொருள் இருந்தது பின்னர் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.