பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சாலை தடுப்பு நடவடிக்கைகளில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய இருவரை போலீஸார் கைது செய்தனர் என்று பெட்டாலிங் ஜெயா ஓசிபி ஏசிபி நிக் எஸானி பின் முகமட் பைசல் தெரிவித்தார்.
சனிக்கிழமை இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணிவரை நடத்தப்பட்ட சாலை தடுப்பு நடவடிக்கையில் மொத்தம் 313 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய இருவர் கைது செய்யப்பட்டன. மேலும் போக்குவரத்து சட்டங்களுக்கு எதிரான செயல்கள் தொடர்பில் 18 சம்மன்கள் வெளியிடப்பட்டன என்று அவர் கூறினார்.