கொழும்பில் திடீரென உயிரிழந்த சீனப் பெண்!!

கொழும்பில் சீன நாட்டு பெண் ஒருவர் திடீரென உயிரிழந்ததன் தொடர்பில் கொள்ளுப்பிட்டி போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்,

கொள்ளுப்பிட்டி, கேரன் ஹெபர் அவெனியூ வீட்டுத்தொகுதியில் வசித்த 51 வயதான ஷென் ஷெரோன் என்ற சீன மாது உயிரிழந்துள்ளார்.

அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது,

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என பொதுமக்கள் நம்புவதால் கொள்ளிப்பிட்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

சீன மாது வீட்டு அறையில் கட்டிலின் மீது உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here